என்ஜிஓக்களின் பங்களிப்பு

மதிய உணவுத் திட்டத்தை செயல்படுத்துவது மற்றும் விரிவாக்குவதில் என்ஜிஓக்கள் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன. அவர்கள் சென்றடைவதற்கான குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக மதிய உணவுத் திட்டத்தை அமல்படுத்துவதற்கு Akshaya Patra ஃபௌவுண்டேஷன்  போன்ற என்ஜிஓக்களுடன் மாநில அரசு அமைப்புகள் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. இவ்வாறு, பல என்ஜிஓக்கள் பசி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டினை எதிர்த்து பணியாற்றுகின்றன.   

இந்த தனியார்- பொதுக் கூட்டாண்மை (பி.பி.பி) திட்டத்தின் தரம் மற்றும் சென்றடைதலை  மேம்படுத்த கருவியாக இருப்பதை நிரூபித்துள்ளன. ஒரு இலாப நோக்கற்ற நிறுவனத்துடன் கூட்டு   வைத்துக்கொள்வதற்காகத் தேர்ந்தெடுக்கும் போது அரசாங்கம் கருதும் பல்வேறு அம்சங்கள் உள்ன. அத்தகைய நிறுவனங்கள் ஒளிவு மறைவற்றவையாகவும் ’நிரூபிக்கப்பட்ட நேர்மையுடையவனாகவும்’ இருக்க வேண்டும். கீழுள்ளவை ஒரு என்ஜிஓவைத் தேர்ந்தெடுப்பதற்கான என்.பி-என்.எஸ்.பி.ஈ 2004 நிபந்தனை ஆகும்.

NP-NSPE 2004 criteria for choosing an NGO

  • தன்னார்வ முகமைகள் மதம், சாதி மற்றும் நம்பிக்கை அடிப்படையில் எந்த வொரு வகையிலும் பாகுபடுத்தக்கூடாது மற்றும் எந்தவொரு மத நடைமுறைகளை பரப்புவதற்காக திட்டத்தைப் பயன்படுத்தக்கூடாது.

  • ஒரு தன்னார்வ நிறுவனம் சங்கங்களுக்கான பதிவுச் சட்டம் அல்லது  பொது அறக்கட்டளை சட்டத்தின் கீழ் ஒரு அமைப்பாக பதிவு செய்யப்பட்டிருக்கவேண்டும், மற்றும் குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு செலய்பாட்டிருக்கவேண்டும்.

  • இலாபநோக்கற்ற அடிப்படையில் வினியோகிக்கும் பொறுப்பினை எடுத்துக்கொள்வதற்கான பொறுப்பு

  • மாநில அரசாங்கத்தின்  பொருத்தமான வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப பி.ஆர்.ஐகள் / நகராட்சி அமைப்புகளுடன் பணியாற்றுவதற்கான விருப்பம்.

  • தேவையான அளவு மதிய உணவு வினியோகிப்பதற்கான நிதி மற்றும் சரக்கிருப்பு.

  • ஒரு அனுமதி பெற்ற பட்டயக் கணக்காளரின் முறையான சான்றுடன், மாநில அரசிடமிருந்து பணமாகவும் பொருளாகவும்பெற்ற அனைத்து நிதிகளுக்கான கணக்கின் ஒரு தணிக்கை செய்யப்பட்ட அறிக்கையினை, அது தனக்கு வேலையை ஒதுக்கீடு செய்த அமைப்பிடம் சமர்ப்பிக்கும்.

 

தானிய மானியங்களில் இருந்து சமைக்கப்பட்ட சாப்பாடு ரை

 தேர்வு செய்யப்பட்டவுடன், ஒரு என்ஜிஓ ஒரு சமையலறையை அமைத்து, உணவைத் தயார் செய்தவற்கான செயல்பாடுகளில் ஈடுபட்டு அதில் நடப்பு செலவுகளைப் பராமரிக்கவேண்டும். என்.பி-என்.எஸ்.பி.ஈ, 2004 வழிகாட்டுதல்களின்படி,

‘பள்ளிகளுக்கான ஒரு தொகுதிக்கு ஒரு மையப்படுத்தப்பட்ட ஒரு   சமையலறையை   அமைப்பது சாத்தியமாக உள்ள நகர்புறப் பகுதிகளில், சமையல், பொருந்தக்கூடிய இடங்களில் மையப்படுத்தப்பட்ட சமையலறையில் மேற்கொள்ளப்படவேண்டும் மற்றும் சமைக்கப்பட்ட சூடான உணவு சுகாதாரமான நிலைமைகளில் ஒரு நம்பகமான போக்குவரத்து அமைப்பு மூலமாக பல்வேறு பள்ளிகளுக்கு எடுத்தச் செல்லப்பட வேண்டும். அவர்கள் பரிமாறும் தொகுதிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து, ஒரு நகர்புறப் பகுதியில் ஒன்று அல்லது அதற்கு அதிகமான ஒருங்கிணைப்பு சமையலறை(கள்) இருக்கலாம்.’

 

இந்தத் திட்டத்தை செயற்திறத்துடன் செயல்படுத்துவதற்காக, திட்டத்திற்கான தளபாடங்களை கையாள்வதற்கு ஒரு என்ஜிஓ நல்ல வசதிகளைக் கொண்டிருக்கவேண்டும். ஒரு இலாப நோக்கற்ற அமைப்பு ‘தேவையான அளவு மதிய உணவினை வழங்குவதற்கு  தேவையான நிதி மற்றும் தளபாடத் திறனை  கொண்டிருக்கவேண்டும்’.


இதை எவ்வாறு அடைவது என்பதற்கான ஒரு தீர்வினை அரசாங்கம் வழங்கும். மனித வளத் அமைச்சகத் துறை தெரிவிப்பதாவது:


 “தகுதிவாய்ந்த பள்ளிகளில் சமைக்கப்பட்ட உணவு அல்லது சமைக்கப்படாத உணவு வகைகளை என்ஜிஓக்கள் ஆதரவுடன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான முழுப் பொறுப்பும் மாநிலய அரசுடையதாகும். இந்த எல்லைக்கு உட்பட்டு சம்பந்தப்பட்ட ஒரு மாநில அரசு அல்லது என்ஜிஓவை, உணவு தானியங்களை சமைத்த சாப்படாக மாற்றுவதற்கான வளங்களை செயல்படுத்தலாம்.”     

                                                              - வழிகாட்டுதல்கள், பிற்சேர்க்கை IX பத்தி 7

இந்தத் தீர்வானது சராசரியாக ரூ. 80 மில்லியன் (8 கோடிகள்) மதிப்புமிக்க சமையலறைகளை நாடெங்கிலும் கொண்டுள்ள, Akshaya Patra போன்ற நிறுவனங்களை, தங்களின் பெருமளவு கட்டமைப்புகளை அமைப்பதற்கும் அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களின்படி திட்டத்தை நடத்துவதற்கும் அனுமதிக்கிறது. இது திட்டத்தை செயல்படுத்தும்  போது ஏற்படும் பற்றாக்குறைக்காக நிதிகளைத் திரட்டுவதற்கான ஒரு வழிமுறையை என்.ஜி.ஓகளுக்குத் தருகிறது.


2008-2009க்கான திட்ட ஒப்புதல் குழு கூட்டத்தின் கூட்டக் குறிப்புகள் தெரிவிப்பதாவது, “சமையற்காரர்களின் மதிப்பூதியம், பாத்திரங்கள் மற்றும் சமையலறை கட்டுமானம், போக்குவரத்து போன்ற பிற செலவுகள் NGOக்களால் ஏற்கப்படவேண்டும்.”

பெறப்பட்ட நிதிகளுக்கான வசதிகளையும் அரசாங்கம் செய்துள்ளது. உதாரணமாக 2003ல், முன்னாள் இந்திய தலைமை நீதிபதியின் தலைமையான ஒருக் குழு  (தேசிய சமூக மற்றும் பொருளாதார நலன்  மேம்பாட்டுக்கானக் குழு, வருவாய்த் துறை, நிதி அமைச்சகம், இந்திய அரசு) 3 ஆண்டுகளுக்கு நன்கொடையாளர்களுக்கு 100% வரி சலுகைகளுடன் ரூ. 220 மில்லியன்  (22 கோடி) வரை நன்கொடைகள் பெறுவதற்கு தகுதியுள்ள திட்டமாக Akshaya Patraவை பரிந்துரைத்துள்ளது.

இந்தக் குழு 2006ல் Akshaya Patraவின் திட்டத்தை மீண்டும் ஒரு முறை மறுஆய்வு  செய்தது மற்றும் ரூ. 1,000 மில்லியன் (100 கோடி) வரை வரி இல்லாத நன் கொடைக்கான தொகையை அதிகரித்தது. 2009ல் மற்றுமொரு மறுஆய்வு அத்தொகையை 3 ஆண்டு காலத்திற்கு ரூ. 2,000 மில்லியன் (200 கோடி) வரை அதிகரித்துள்ளது.

அரசாங்கங்களிற்கு இரகசியம் தெரிந்துள்ள, நிறுவனங்களின் அறக்கட்டளை ஒப்பந்தங்கள், அவற்றை நிதிதிரட்ட அனுமதிக்கின்றன. Akshaya Patra அறக்கட்டளை  ஒப்பந்தம் பின்வருவனவற்றைத் தெரிவிக்கின்றது:

8.xi உலகெங்கிலுமுள்ள தனிநபர்  பெருநிறுவனங்கள் மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனகளிடமிருந்து பரிசுகள், நன்கொடைகள் அல்லது பங்களிப்புகளை ஏற்பதற்கு, இது வரை அவர்கள் அறக்கட்டளையின் நோக்கங்களுக்கு முரண்படாமல் இருக்கின்றார்கள்

என்.ஜி.ஓக்களை ஊக்கப்படுத்துவதற்கு அரசாங்கத்தின் முடிவில் இரு முனை உத்தியுள்ளது. இதைச் செய்வதன் மூலம், அது திட்டத்தின் தரத்தை மட்டும் உயர்த்தவிலை, ஆனால் சமுதாய ஈடுபாட்டையும் மேம்படுத்துகிறது. என்.பி-என்.எஸ்.பி.வழிகாட்டுதல்களின்படி, 2004 ”செயல்முறைகள் துடிப்பான சமூக ஈடுபாட்டை உறுதிசெய்வதற்காக அமைக்கப்பட வேண்டும் அதனால் மதிய உணவுத் திட்டம் மக்களின் திட்டமாக ஆகும்.’

தன்னார்வத் தொண்டுகள் மற்றும் நிதித் திரட்டல்கள் மூலம் சமுதாயப் பங்கேற்பினை என்.ஜி.ஓகள் மேம்படுத்துகின்றன. அவர்கள் சமூகத்தின் அனைத்து தட்டு மக்களையும் ஈடுபடுத்துகிறார்கள் மற்றும் மதிய உணவுத்  திட்டத்தை “மக்கள்” திட்டமாக மாற்ற உதவுகிறார்கள்.

அதை ஒளிவு மறைவற்றதாக வைத்திருத்தல்

பொதுத்  துறை –தனியார் துறை கூட்டாண்மை ஒளிவு மறைவின்மைக்கான கேள்வி இப்போது எழுகிறது. ஒரு  தேசிய அளவிலான  வழிப்படுத்தல் மற்றும் கண்காணிப்பு குழு (என்.எஸ்.எம்.சி) திட்டத்தின் மேலாண்மையையும் கண்காணிப்பையும் மேற்பார்வையிடுகிறது.         
 என்.பி-என்.எஸ்.பி., 2004ல் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு, குழுவின் கடமைகளில் அடங்குபவை:

 

  • ’திட்டத்திற்கு சமுதாய ஆதரவைத் திரட்டுவது மற்றும்  பொது-தனியார் கூட்டாண்மையை மேம்படுத்துவது’

  •  

    ‘திட்டசெயல்பாட்டினை கண்காணிப்பது, அதன் தாக்கத்தை மதிப்பிடுவது மற்றும் திருத்த நடவடிக்கைகளை எடுப்பது”

 

தகுதிக்கான நிபந்தனைகளில் ஒன்று ‘ சங்கம் அல்லது நிறுவனத்தின் விவகாரங்களை நிர்வகிக்கும் நபர்கள் நேர்மைக்காக நிரூபிக்கப்பட்ட நபர்களாவர்  (தேசிய சமூக மற்றும் பொருளாதார நலன் மேம்பாட்டுக்கானக் குழு,  இந்திய அரசு)  மற்றொன்று ‘சங்கம் அல்லது நிறுவனம் தனது பற்றுச் சீட்டுகள் மற்றும் செலவீனங்களின் கணக்குகளை ஒழுங்காக பராமரிப்பது’. தன்னார்வ நிறுவனத்தால் வழக்கமாக அறிக்கைகள் சமர்பிக்கப்பட வேண்டும்.

முடிவுகள்

மதிய உணவுத் திட்டத்தை செயல்படுத்துவதில் பல்வேறு தனியார்  அமைப்புகளின் ஈடுபாடு     நன்றாகத்  தெரியக்கூடிய சிறந்த செயற்திறனை விளைவித்துள்ளது.

  • கிட்டத்தட்ட 120 மில்லியன் (12 கோடி) குழந்தைகள் இது வரை இந்த்த் திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டு, அது இந்தத் திட்டத்தை உலகின் மிகப் பெரியத் திட்டமாக ஆக்கியிருக்கிறது. அரசாங்கத்தின் பன்முக அணுகுமுறை பெரிய அளவிலான முடிவுகளைக் காட்டியுள்ளது. 

  • தனது செயல்படுத்தும் கரமாக  செயல்படுவதற்கு Akshaya Patra போன்ற நிறுவனங்களின் தனிச்சிறப்பான வளங்களை அதிகரிப்பதன் மூலமும் அவற்றை இயன்றளவு தன்னிறைவுடன் இருக்கச் செய்வதன் மூலமும், அரசாங்கம் சமூகம் முழுவதையும் நமது நாட்டின் குழந்தைகளுக்கு உதவுவதில் வெற்றிகரமாக ஈடுபடுத்தியுள்ளது. நிதி திரட்டுதல் மற்றும் தன்னார்வத் தொண்டு மூலம் சமுதாயப் பங்கேற்பினை இந்த ஃபௌண்டேஷன்கள் மேம்படுத்துகின்றன.

  • திட்டத்தின் வெற்றியை உறுதி செய்வதில் தனியார் பொதுத் துறை கூட்டாண்மையில் அது ஒரு கருவியாக இருப்பதற்கு ஊக்குவித்துள்ளது. இந்த நிறுவனங்களின் உதவியுடன், பெருமளவு விகிதாசாரங்களிற்கு திட்டத்தை விரிவுபடுத்த அரசாங்கத்தால் முடிந்தது.

  • திட்டம் பல வகைகளில் குழந்தைகளிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வருகைப்பதிவு அதிகரித்துள்ளது, வகுப்பறை பசி குறைந்துள்ளது, ஊட்டச்சத்துக் குறைபாடு குறைந்துள்ளது மற்றும் அனைத்து சாதி குழந்தைகளிடமும் சமூக உடமையாக்கல் மேம்பட்டுள்ளது.

  • உலகளவில், ஆயிரம் ஆண்டுக்கால மேம்பாட்டு இலக்குகளை நிறைவு செய்வதற்கு இந்திய அரசாங்கம் கடுமையாகப் பாடுபட்டுள்ளது.

Share this post

Note : "This site is best viewed in IE 9 and above, Firefox and Chrome"

`